வடமராட்சி கடற்பரப்புக்குள் இன்றும் நுழைந்த இந்தியப் படகுகள்!

வடமராட்சி – கிழக்கு மீனவர்களை படுகொலை செய்தமை, மீனவர்களின் வலைகளை அறுத்துச் சேதப்படுத்தியமை உட்பட்ட இந்திய மீனவர்களின் அடாவடிச் செயற்பாடுகள் நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் நிலையில் தற்போது வடமராட்சி கடற்பரப்புக்குள் நுழைந்துள்ள இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது.

பருத்தித்துறையில் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கரையிலிருந்து தெரியும் தொலைவில் குறித்த படகுகள் தென்பட்டிருக்கின்றன.

அதனை உறுதி செய்வதற்காக கரையிலிருந்து மீனவர்கள் சென்று நேரில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இதனை அடுத்து கரையிலிருந்து பல படகுகளில் மீனவர்கள் அங்கு விரைந்திருப்பதாகவும் அதேவேளை பருத்தித்துறை முனை பகுதியிலிருந்து கடற்படைப் படகும் அங்கு விரைந்திருப்பதாகவும்; தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல அரசு தயார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *