நீண்ட வார இறுதி விடுமுறை: சுகாதார தரப்பினர் விடுத்துள்ள எச்சரிக்கை

சுதந்திர தினத்துடன் ஆரம்பமாகும் நீண்ட வார இறுதி விடுமுறைக் காலத்தில் சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இது குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வார இறுதி நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா செல்லும் நபர்கள் மிகுந்த சன நெரிசல் மிக்க இடங்களை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.

இலங்கையில் 15 மில்லியன் பேர் இரண்டு டோஸ் கொரோனாத் தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ள போதிலும், பலர் மூன்றாம் டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மின்சக்தி அமைச்சருக்கு முக்கிய பணிப்புரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *