கடலில் சாவதை விட வீதியில் சாவோம்! – யாழ் மீனவர்கள் ஆதங்கம்

கடலில் எப்போது சாவோம் என்று தெரியாது. ஆகவே வீதியில் போராடி சாவோம் என யாழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எமது கடற்பரப்பில் நாளுக்கு நாள் இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

நாம் சொல்லி சொல்லி பார்த்தோம் ஒரு பிரியோசனமும் இல்லை. கடல் வளம் அழிக்கப்படுகிறது, எமது மீனவர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு தீர்வு வேண்டும்.

இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ சங்கங்களும் ஒன்றிணைந்து போராடி வருகின்றோம்.

கடலில் எப்போது சாவோம் என்று தெரியாது. ஆகவே வீதியில் போராடி சாவோம் என்று முடிவெடுத்துள்ளோம். அடுத்த கட்டமாக எ9 வீதி முடக்கப்படும். – என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *