ஒமிக்ரான் பரவல் காரணமாக பாராளுமன்றம் ரத்து

ஈரானில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகின்ற காரணத்தால் பாராளுமன்ற ஒன்றுகூடல்கள் சில நாட்களிற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 290 பாராளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 47 பேர் ஆவது இதுவரையில் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளனர்.

இதனால் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் ஏற்பாடாகியிருந்த ஒன்றுகூடல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் இதேபோல பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு அதிகளவு தொற்று இனங்காணப்பட்டிருந்தமையால் இவ்வாறு பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டு முதலாம் அலையில் பலர் இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போது தொற்று உறுதியாகியுள்ளவர்களில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *