மலையிலிருந்து தவறிவிழுந்து ஒருவர் உயிரிழப்பு!

ஹட்டன்- திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதேச மருத்துவமனைக்கு அருகிலுள்ள மலையொன்றிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தனை – டெரிக்கிலாயர் தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுமார் 30 அடி உயரமான மலையிலிருந்து தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் வீழ்ந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *