
நாட்டின் சுதந்திர தினத்தை இம்முறை எளிமையாக கொண்டாடுவது நல்லது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுகிறது.
டீ.எஸ்.சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கியவர். சுதந்திரத்திற்காக பெரிதும் போராடியவர். எனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரம் தினத்தை கொண்டாட உரிமை உள்ளது.
இன்று நாட்டை கவனித்தால் சுகாதார நிலைமையிலும் சரி, பொருளாதாரத்திலும் சரி பாதுகாப்பிலும் சரி, சீர் குலைந்துள்ளது. சுகாதாரம் பற்றி நோக்கினால் கவலைக்கிடமாகத்தான் காணப்படுகிறது.
நாட்டில் முப்படையினரும் சுதந்திர தினத்தில் கலந்து கொள்வர். இருப்பினும் அவர்களில் யாருக்காவது ஒமிக்ரான் காணப்பட்டால் நிலைமை என்ன. எனவே இவ் கூட்டம் கூடுவதை சற்று கருத்திற்கொள்ள வேண்டும்.
அதேபோல இராணுவத்தினர், கடற்படை, விமானப்படை அவர்களின் வினோத செயற்பாடுகளை பாதுகாப்பாக கருத்திற் கொள்ள வேண்டும்.
பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் சுதந்திர தின விழா கொண்டாட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நிலை பற்றியும், பொருளாதார பற்றியும் இந் நேரத்தில் கவனத்திற்கொள்ள வேண்டும். – என்றார்.