
எந்தவொரு திட்டமும் இல்லாமல் நாட்டில் எரிபொருள் பிரச்சினையை தீர்க்க முடியாது என கனிய எண்ணெய் வள பொது சேவை தலைவர் தலைவர் அசோக ரன்வேல தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று கனிய எண்ணெய் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உதய கம்மன்பில மாற்றத்தை கொண்டு வருவார் என நினைத்தோம். ஆனால் அவரிடம் எந்த திட்டமும் இல்லை.
மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் இந்தியாவிற்கு எண்ணெய் கிடங்குகளை வழங்கியுள்ளனர்.
எண்ணெய் கொண்டு வருவதற்கு டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. என்றாலும் நாட்டிற்கு எண்ணெய் பெற்று தர வேண்டியது எரிசக்தி அமைச்சின் கடமை.- என்றார்.