
வாகன விபத்தில் காலை இழந்த 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் சந்தரு டில்ஷான் என்னும் மாணவனுக்கு பிரதமரின் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷவால், செயற்கை கால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து செயற்கை கால் வழங்கிவைக்கப்பட்டது.
செயற்கை காலினை கொள்வனவு செய்வதற்காக தான் பாடசாலை நேரத்தின் பின்னர் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டதாகவும், கடுகஹகல்கேகம கனிஷ்ட பாடசாலையின் அதிபர் டீ.எம்.எஸ்.எஸ்.திசாநாயக்க இது குறித்து அறிந்து பிரதமரின் பாரியாருக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து, இன்று தனக்கு செயற்கை கால் கிடைத்துள்ளதாகவும் குறித்த மாணவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
