
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்த இடமாற்றம் எதிர்வரும் 07ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனடிப்படையில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டா, வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸார், முதலமைச்சின் செயலாளராக பீ.கலாமதி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக ஜே.ஜே.முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்காவும். கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக எம்.வை.சலீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு எம்.கோபாலரத்னம், பிரதி பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜலீல், பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) மன்சூர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம்: கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல்: மூன்று பேர் கைது!