நாட்டில் இன்றும் மின் வெட்டு? வெளியான மின்சார சபையின் அறிவிப்பு

நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படாதென எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபைக்கு போதுமான எண்ணெய்யைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்;.

இதன்படி, பெரும்பாலும் இன்றைய தினத்திற்கு அவசியமான எண்ணெய் மின்சார சபைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்படுகின்றது.

எனவே, போதியளவு உலை எண்ணெய்யும் டீசலும் கிடைக்கப்பெறுமாயின், நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படாதென அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக திருத்தப்பட வேண்டும்! மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *