சேறு பூசல்களின் பின்னணியில் யார்? நாமல் பதில்

தற்போதைய அரசாங்கமானது ஜனநாயக நடைமுறையை தெளிவாக நம்பி, அதனைப் பாதுகாக்கும் அரசாங்கமாக இருப்பதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர்,

நாட்டில் உள்ள அரசியல் சக்திகள் இணைந்து வாழ வேண்டும் என்று நம்பும் அரசாங்கமாக தாம் இருக்கின்றோம்.

மக்கள் விடுதலை முன்னணியானது, வீடுகளையும் மக்களையும் எரித்த வரலாற்றைக் கொண்ட கட்சி. அண்மைய சேறு பூசும் தாக்குதல் ஜே.வி.பி உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட சண்டையாக அல்லது அவர்களுக்கு இடையேயான சண்டையாகக் கூட இருக்கலாம்.

இதன் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே இதை யார் செய்தார்கள் என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *