மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் – கம்மன்பில உறுதி

மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாட்டிற்கு தேவையான எரிபொருள் ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

மின்சார சபைக்கு தேவையான எரிபொருள் இன்று முதல் வழங்கப்படும் என்றும் இதனால் மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நுரைச்சோலை, சப்புகஸ்கந்த, களனிதிஸ்ஸ மற்றும் கொழும்பில் உள்ள மின் உற்பத்தி நிலையமொன்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இதன்காரணமாக நேற்று நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *