அனுமதியின்றி செயல்பட்ட இரவு விடுதி சுற்றிவளைப்பு: 12 வெளிநாட்டவர்கள் கைது

கொழும்பு, பெப் 2: கொள்ளுப்பிட்டியில் அனுமதியின்றி இயங்கிவந்த இரவு நேர விடுதியை காவல்துறை சுற்றிவளைத்தது. இதன்போது, 12 வெளிநாட்டவர்கள் உள்பட 14 சந்தேக நபர்களை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் ஒன்பது ஆண்கள், மூன்று பெண்கள் அடங்கும்.

அங்கிருந்து, 483 உரிமம் இல்லாத பீர் பாட்டில்கள், ஆறு பாட்டில் ஒயின், ஒரு பாட்டில் உள்ளூர் மதுபானம், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இவர்கள், கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *