தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் நுழைவாயில் திறப்புவிழா!

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் இரண்டு நுழைவாயில்கள் திறக்கும் நிகழ்வானது இன்றையதினம் மங்களம் மணிசேகரன் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரியின் மேற்கு பக்க நுழைவாயிலுக்கு, 1979ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பழைய மாணவர்கள் மற்றும் 1982ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பழைய மாணவர்கள் நிதி அனுசரணை வழங்கினர்.

அதேபோல கல்லூரியின் கிழக்கு பக்க நுழைவாயிலுக்கு 1998ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண பழைய மாணவர்கள் மற்றும் 2001ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர மாணவர்கள் நிதி அனுசரணை வழங்கினர்.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *