
ஒமிக்ரான் பரவலுடன், அன்டிஜென் சோதனை கருவிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அன்டிஜென் பரிசோதனை கருவிகள் குறைவாக வழங்கப்படுவதே இப்பிரச்சினைக்கு காரணம் என பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள அன்டிஜென் சோதனைக் கருவிகள் உடனடி முடிவுகள் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.