மட்டக்களப்பில் காணாமல் போன சிறுவனை தேடியலையும் பெற்றோர்

சந்திவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவன் காணாமல் போயுள்ளார்.

மட்டக்களப்பில் சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவர் வீட்டில் இருந்து நிலையில் கடந்த 28ம் திகதி காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சிறுவனின் பெற்றோர் இன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் தெரியவருகையில்,

சந்திவெளி பத்தினி அம்மன் கோவில் வீதி ஜீவபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய அன்ரனி ஆனுராஸ் என்ற சிறுவன் சம்பவதினமான கடந்த மாதம் 28ம் திகதி வீட்டில் இருந்து வெளிய சென்ற சிறுவன் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பயமடைந்தனர்.

மேலும் கையடக்க தொலைபேசி கவரினுள் வைத்திருந்த இரண்டாயிரம் ரூபா பணத்தை காணவில்லை, அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் அவரை கண்டுபிடித்துதருமாறு பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *