
கோண்டாவில் கிழக்கில் உள்ள பாதிரியார் ஒருவரின் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது. கொட்டன்கள், பொல்லுகளுடன் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கியுள்ளது. வீட்டின் ஜன்னல், கதவு என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்த அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
சம்பவ இடத்துக்குச் சென்று கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.