
இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றி வரும் நயோர் கிலான் இப்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கைகளை சமர்ப்பித்து இஸ்ரேல் தூதுவராக பதவியேற்றுள்ளார்.
இதன் பின்னர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாற்றியிருந்தார்.
இதுதொடர்பாக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் அவர்,
“இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினேன். அப்போது விவசாயம், நீர், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பல துறைகளில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுறவுகளை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடி உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.