
கொழும்பு, பெப் 3: காலி, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களில் வியாழக்கிழமை மாலை சிறிதளவு மழை பெய்யும், இதைத் தவிர,நாடு முழுவதும் சீரான வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது:
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
காற்று வடகிழக்கு திசையில் மணிக்கு 20-30 கி.மீ. வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.