
கொழும்பு, பெப் 3: களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. டீசல் பற்றாக்குறையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவோம் என்று எரிசக்தி அமைச்சர் வாய்மொழியாக உறுதியளித்துள்ள நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது.