வாரணாசியில் போலி கொரோனா தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது

வாரணாசி ரோஹிட் நகரில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான போலி கொரோனா தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் போலி கொரோனா தடுப்பூசிகள் மற்றும் கொரோனா பரிசோதனை கருவிகள் தயாரிக்கப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியை முற்றுகையிட்ட தனிப்படையினர் அங்கு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், 4 கோடி ரூபாய் மதிப்பிலான போலி கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பரிசோதனை கருவிகளை கைப்பற்றியுள்ளனர்.

அதேநேரம் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதகாவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *