
கொழும்பு, ஜனவரி 3: நாட்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு நோயால் 7,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோயாளிகளில் 52% பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இதில், அதிகளவு பாதிப்பு கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும், கம்பஹா,களுத்துறை மாவட்டங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், வடமேல் மாகாணத்தின் குருநாகல், புத்தளம் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்புக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.