தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் போது, எதிர்பாராத வகையில் எதிர்பாராக வயது பிரிவினர் மரணிக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
எனவே வைரஸ் பரவலுக்கு இடமளிக்காத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய கோவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.