நாடளாவிய அபிவிருத்தித் திட்டத்தை தொடக்கி வைத்த நிதி அமைச்சர்

கொழும்பு, பெப் 3:

நாட்டு மக்கள் அனைவரதும் வருமானத்தை வலுப்படுத்தி, இலங்கையை வளமான நாடாக மாற்றும் வகையிலான ‘வேத லட்சயக்’ என்ற நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தித் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

‘ஒரு லட்சம் வேலைத் திட்டம்’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம், நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலாளர் பிரிவுகள், 14,021 கிராம சேவையாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், கிராம சேவையாளர் பிரிவொன்றில் 5 அல்லது 6 திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *