
களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் நால்வர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான சந்தேக நபர் நேற்று இரவு சட்டத்தரணி ஊடாக ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக மொத்தம் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது நேற்று (புதன்கிழமை) அதிகாலை வெளி குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், மூன்று மாணவர்கள் ராகம வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வாகனங்களில் வந்த 15 பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை நடத்தியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.