
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,72,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொற்று எண்ணிக்கை 1,61,386-ஆக இருந்த நிலையில் நேற்று 6.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் விகிதம் 10.99 சதவீதமாக உள்ளது. இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 4,16,30,885-ல் இருந்து 4,18,03,318-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 2,59,107 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,95,11,307-ல் இருந்து 3,97,70,414-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1008 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இதன் எண்ணிக்கை 1733 ஆக இருந்த நிலையில் குறைந்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,97,975-ல் இருந்து 4,98,983-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,33,921-ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.