
யாழ் கடல் பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து ,பல்வேறு பிரதேசங்களில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வடமராட்சி பொலிகண்டி பிரதேசத்தில் படகு மற்றும்,இந்திய மீனவர்களால் அறுக்கப்பட்ட வலைகளை தீயிட்டு கொளுத்தி மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் மாதகல்,பருத்தித்துறை சுப்பர் மடம்,தொண்டமானாறு ,யாழ் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவர்கள் முற்றுகை போராட்டத்தை இன்று காலை முதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

