சுதந்திர தினத்தன்று ரஞ்சன் பூரணமாக விடுதலை செய்யப்படுவார்! சஜித் நம்பிக்கை

சுதந்திர தினத்தன்று ரஞ்சன் ராமநாயக்க பூரணமாக விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று காலை சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு கலைஞராக, அவர் கலைத் துறைக்கு பெரும் சேவை ஆற்றி வந்தார். அவர் ஆற்றிய பொது சேவையை மேலும் வலுவாக முன்னெடுக்க அவரது கொடுப்பனவுகள், சம்பளம், சலுகைகள், வரப்பிரசாதங்கள் அனைத்தையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணித்த தலைவர் என்ற வகையில், நாளை அவர் முழுமையாக விடுதலை பெறுவார் என நம்புகிறோம்.

மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து, மனிதாபிமானியின் பூரண விடுதலைக்காக அவரை நாளை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

மனித நேயத்திற்காகவே இந்த பரிந்துரையை முன்வைக்கிறேன். – அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *