முட்டை, கோழி இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 1,00,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்தார்.

இதற்கமைய, சோள இறக்குமதியின் மூலம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுள்ளது.

அதற்கமைய, ரூ.25 ஆக இருந்த முட்டையின் விலை ரூ.20 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கோழி இறைச்சியின் விலையும் குறையும்.

இதேவேளை, முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவையும் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவரான அஜித் எஸ்.குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *