இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டது முக்கிய எச்சரிக்கை – அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்து!

<!–

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டது முக்கிய எச்சரிக்கை – அவதானத்துடன் செயற்படுமாறும் வலியுறுத்து! – Athavan News

ஒமிக்ரோன் தொற்றால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தற்போது குறைவாகக் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் அந்த நிலைமை மாற்றமடையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்தால் பாரிய அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆரம்ப கட்டத்திலேயே தொற்றாளர் எண்ணிக்கையை குறைந்த மட்டத்தில் பேணக் கூடியதாக இருந்தால் இவ்வாறான ஆபாயங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *