நாடு எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தற்காலிகமானவையே: சுதந்திர தின உரையில் கோட்டபாய ராஜபக்ச

கொழும்பு, பெப் 4: நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தற்காலிகமானவையே. இவை நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல. தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்க நாட்டு மக்கள் அனைவரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்தார்.

நாட்டின் 74 வது சுதந்திர தினம், சுதந்திர சதுக்கத்தில் வெள்ளிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: நாட்டில் மத, ஊடக, கருத்து சுதந்திரம் உள்ளது. உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் சில வேளைகளில் எமக்கு எதிராகச் செயற்படுகின்றன. மக்கள் இவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.

நாடு எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க நான் தயாராக உள்ளேன். சிறந்த கொள்கைகளால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தற்காலிகமான பிரச்சினைகளே. இவை நீண்டகாலப் பிரச்சினைகள் அல்ல.

இந்த கடினமான காலம் தொடர்ந்து நீடிக்காது. கடினமான காலங்களை எதிர்கொள்ள வலிமையானவர்கள் தேவை. தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிக்க நாட்டு மக்கள் அனைவரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாதென கூறினார்கள். ஆனால் நாங்கள் பயங்கரவாதத்தை வெற்றி கொண்டோம். நாட்டை பாதுகாக்கும் தலைவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் அடிப்படைவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *