
கொழும்பு, பெப் 4: சுதந்திர தினத்தை முன்னிட்டு, 2,500க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
74 வது தேசிய சுதந்திர தினத்தை ஒட்டி, இலங்கை விமானப்படையின் 175 அதிகாரிகள், 2,338 மற்ற தரவரிசை வீரர்கள் அவர்களின் அடுத்த தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
தாய் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த அதிகாரிகள் பதவி உயர்த்தப்படுவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 480 அதிகாரிகள் மற்றும் 8,034 ராணுவ வீரர்களுக்குப் பதவி உயர்வை இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.