இனி அடங்கிப்போக மாட்டோம் – காணாமல் ஆக்கப்பட்டவரக்ளின் உறவுகள் சபதம்!

இலங்கையின் 74ஆவது சுந்தந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் வடக்கில் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மக்கள் எழுச்சிப் பேரணி தமிழ் இன அழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் முற்றத்திலே இன்று நடைபெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

நாடு சுதந்திரமடைந்து விட்டது என்று தெற்கிலே விழா நடைபெறுகிறது. ஆனால் தமிழ் மக்கள் இங்கு படும் வேதனை அரசுக்கு புரியவில்லை. நாம் கறுப்பு உடைகளை அணிந்து இங்கே கூத்தாடுகின்றோம் என்று நினைக்கிறார்கள்.

எங்களுடைய வேதனை துன்பத்துக்கு காரணமாணவர்கள் யார் என்று நன்கு அறிவோம். அவர்கள் எம்மை அடக்கி பார்க்க நினைக்கிறார்கள். இனியும் நாம் அடங்கி போக மாட்டோம்.

இன்றில் இருந்து மக்கள் எழுச்சிப் போராட்டம் ஆரம்பம். இனி தொடர்ந்து கொண்டே செல்லும். கடைசி உயிர் பிரியும் மட்டும் போராட்டம் தொடரும். – என்றனர்.

முள்ளிவாய்க்காலில் மாபெரும் போராட்டத்திற்கு ஒன்றுகூடியுள்ள உறவுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *