
வடமராட்சி மீனவர்களின் போராட்டத்துக்கு நீதி மன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையூறில்லாமல் வீதிமறிப்பைக் கைவிட்டு கவனவீர்ப்புப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையின் சுதந்திர தினமான இன்று, சுமார் 200க்கும் மேற்பட்ட படகுகளில் கறுப்புக்கொடி ஏந்தியவாறு வடமராட்சிக் கடலிலும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.