
களுத்துறை – பயாகல பகுதியில் பிரகதி மாவத்தைக்கு அருகில் உள்ள கடற்கரை பற்றை ஒன்றுக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தின் இடது கை மற்றும் மார்பில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி ரெஜினோல்ட் ஹெட்டியாராச்சி பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் கொலை என சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் நீதிவான் விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பயாகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வின் போது திடீரென மயங்கி விழுந்த மாணவிகள்!