
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினமான இன்று முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்ட பேரணி, வட்டுவாகல் பாலத்தை அண்மித்த நிலையில் தீப்பந்த போராட்டமாக மாறியுள்ளது.
‘கடற்படையே வெளியேறு’,; ‘உறவுகள் எங்கே’, ‘இது எங்களின் சொந்த மண்’, போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்ட பேரணி தற்போது நகர்ந்து செல்கிறது.
அத்துடன் பேரணி இராணுவ முகாம்களை கடந்து செல்லும் வேளையில் இராணுவத்தினர் போராட்டக்காரர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.