
கொழும்பு, பெப் 4: வரும் பெப்ரவரி 7 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்கள் தேர்வு எழுதும் வகையில், சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்டத்தின் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தேர்வு மையங்களில் அல்லது அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சிறப்புப் தேர்வு மையங்களில் A/L பரீட்சைக்கு தோற்றலாம் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.