மீனவர்களின் போராட்டத்துக்கு- நீதிமன்றம் தடை!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்தும், வத்திராயன்பகுதி மீனவர்கள் இருவரின் சாவுக்கு நீதி கோரியும், வடமராட்சி பருத்தித்துறை , சுப்பர்மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மீனவர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பருத்தித்துறைப் பொலிஸார் , நேற்று வியாழக்கிழமை விண்ணப்பம் செய்திருந்தனர்.

’வீதிகளை வழிமறித்து கொட்டகை அமைத்து, மீனவர்கள் போராட்டத்தினை முன்னெடுப்பதனால், குறித்த வீதிகள் ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் , கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே இந்தப் போராட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டுமென மன்றில் பொலிஸார் கோரினர்.

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மீனவர்களின் போராட்டத்துக்கு நீதிமன்று தடை விதித்து கட்டளை பிறப்பித்தது.

நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் , நேற்றுமாலை போராட்டக்களத்துக்கு வந்த பொலிஸார் வீதி மறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கலைந்து செல்லுமாறு அறிவித்தனர். அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விசேட அதிரடி படையினரும் வரவழைக்கப்பட்டு, வீதியில் அமைக்கப்பட்டிருந்த போராட்டக் கொட்டகை அகற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *