
இலங்கையில் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இன பாகுபாட்டின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக செயற்பாட்டளர் ஸ்வஸ்திகா அருலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்தாவது
எமது நாட்டில் சிறுபான்மையினர் பயன்பத்தும் மொழி உபயோகம் குறைவாக காணப்படுவதனால் பாடசாலைகள் அரச நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு முக்கிய காரணமாக அமைவது மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கங்கள் இனவாதக் கருத்துக்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதாகுமென் தெரிவித்தார்.
மேலும் எனது கருத்தும் அனுபவமும் என்னவென்றால் இலங்கையில் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்குப் பதிலாக எங்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்குப் பதிலாக தொடர்ச்சியான அரசாங்கங்கள் இனவாதத்தின் கதைகளுக்கு எப்போதும் பணிந்து செல்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.