
கொழும்பு, பெப் 5: நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எச்சரித்துள்ளது. மேலும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை அந்த சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, நாட்டிலுள்ள பிரதான நீர் ஆதாரங்களின் நீர் மட்டங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
ஆனால், தற்போது மக்களின் நீர் நுகர்வு மிகவும் அதிகமாக உள்ளது. மக்கள் நீரை சிக்கமானமாகப் பயன்படுத்த வேண்டும். வாகனங்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற அத்தியாவசிய தேவையற்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது