
கொழும்பு, பெப் 5: 2022ஆம் ஆண்டுக்கான உலக உச்சி மாநாட்டிற்கு, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், முக்கிய பேச்சாளராகவும் அழைக்கப்பட்டுள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவதை மையமாகக் கொண்ட, உலக உச்சி மாநாடு- 2022, தென் கொரியாவின் சியோல் நகரில் பிப்ரவரி 10 ஆம் திகதி தொடங்கி, 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், நிகழாண்டில் பிரதம அதிதியாகவும், முக்கிய பேச்சாளராகவும் மைத்திரி பாலா சிறி சேன அழைக்கப்பட்டுள்ளார். இந்த மாநாட்டில், 157 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.