
கொழும்பு, பெப் 5: பாலை சிறிய பொதிகளில் அடைத்து விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் தலைவர் மஞ்சுல சுமித் மாகமகே தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் ” வெளிநாடுகளில் உள்ளது போல, பாலை சிறிய பொதிகளில் அடைத்து விற்பனை செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், டொலர் பற்றாக்குறையால் கால்நடை தீவன இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.