500 அரிசி கொள்கலன்கள் உட்பட 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில்!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,800 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளது.

அவற்றில் சுமார் 500 அரிசி கொள்கலன்கள் அடங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள

மேலும் பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மேலும் பல உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களும் தேங்கியுள்ளதாக அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய வங்கி தலையிட்டு குறித்த கொள்கலன்களை விடுவிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *