எனக்கு என்ன நடந்தாலும் சிரித்த முகத்துடன் கலப்படமற்ற வைத்தியராகவே இறப்பேன்! பிரியந்தினியின் முகநூல் பதிவு

கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி, தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் சில தினங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அதுகுறித்து மருத்துவர் பிரியந்தினியின் முகநூல் பதிவில்,

வன்புணர்வு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
பின்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெளிவான அடையாளத்தோடு RDHS அனுப்பியதாக தொலைபேசியினூடு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பனை சீவுவம் வாள் வெட்டு காங் -நேரடியாக RDHS அனுப்பியதாக மீண்டும் மிரட்டல் அதற்கு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளர்ப்பு நாயை லபி- காணவில்லை/கடத்தல் அதற்கு பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்யும் வேலையில் இடம்மாற்ற டிரான்சர் அழைப்பு வந்தாகவும் அதை அவர் நிராகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கண்ட நிண்டவனின் ஓடியோக்களை நானே பிரபலமாவதற்கு லீக்பண்ணினேன் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டு
நான் வேலை செய்த அலுவலகத்திலேயே லீவெடுத்த இரு நாட்களில் பல மாற்றங்கள்
இன்டர்நெட்டில் இல்லாத பொல்லாத கேவலமான கற்பனையிலும் நினைத்துப்பார்க்க இயலாத கதைகள்,  என தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களை பட்டியலிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *