திருகோணமலை வங்கியொன்றில் திடீரென தீப்பரவல்!

திருகோணமலையில் அமைந்துள்ள தேசிய சேமிப்பு வங்கியில் திடிரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று (5)காலை7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறு தீ ஏற்பட்டது என்ற காரணங்கள் தெரியாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு தீ பரவலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை,தேசிய சேமிப்பு வங்கியின் அருகாமையில் எரிபொருள் நிரப்பும் நிலையம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *