வாழ்க்கைச் செலவு நெருக்கடி திட்டம்: அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு!

வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க ஸ்கொட்லாந்தில் உள்ள குடும்பங்கள் எவ்வளவு கூடுதல் பணத்தைப் பெறுவார்கள் என்பதை நிதிச் செயலர் கேட் ஃபோர்ப்ஸ் அடுத்த வாரம் உறுதிப்படுத்துவார்.

இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு 150 பவுண்டுகள், சபையில் வரி விலக்கு அளிப்பதாக திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.

இந்த உறுதிமொழி ஸ்கொட்லாந்து அரசாங்கத்திற்கு 290 மில்லியன் பவுண்டுகள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுகுறித்து நிதிச் செயலர் கேட் ஃபோர்ப்ஸ் கூறுகையில், ‘ஒவ்வொரு பணமும் தேவைப்படும் வீடுகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்வேன்’ என கூறினார்.

ஸ்கொட்லாந்தின் வரவுசெலவு திட்ட சட்டமூலத்தின் இறுதிக் கட்டத்தின் போது, பெப்ரவரி 10ஆம் திகதி ஹோலிரூட்டில் அவர் ஆற்றிய உரையில், நிதிச் செயலர், பணம் எங்கு செலவிடப்படும் என்ற விபரங்களை உறுதிப்படுத்துவார்.

இந்த அறிவிப்பு ஸ்கொட்லாந்திற்கு 290  மில்லியன் பவுண்டுகள் நிதியை உருவாக்கும் என்று திறைசேரி உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *