நிக்கவெரட்டிய குளத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

நிக்கவெரட்டிய – கலபிட்டியகம குளத்தில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நிக்கவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கலபிட்டியகம பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான தம்மிக்க பத்திரன (வயது – 59) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று குறித்த குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், நீரில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதுபற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார் , இதுதொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு குளத்தில் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக நிக்கவெரட்டிய தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நிக்கவெரட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை வங்கியொன்றில் திடீரென தீப்பரவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *