கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழ்நாடு பக்தர்களுக்கு தடை! தமிழக முதல்வர் அவசர கடிதம்

கச்சத்தீவு வருடாந்த திருவிழாவிற்கு தமிழக பக்தர்களை அனுமதிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் கச்சத்தீவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அந்தோணியார் கோவில் திருவிழா மிகவும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொள்வதுண்டு.

இந்நிலையில், இந்த விழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள இலங்கை அரசு தடை விதித்துள்ளது.

இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு விழாவிற்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வரின் இந்த கடிதத்தை டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கை அரசிடம் அனுமதி பெற்றுத் தருமாறும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பது உணர்வுபூர்வமாக கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *