வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் !

வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தில், இராணுவ மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளின் குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 1,243 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதோடு ,கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 615,902 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *