15 வயது பாடசாலை மாணவி குத்திக் கொலை

அக்போபுர, பெப்.5: கந்தளாய், அக்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த சிறுமியின், காதலன் என அடையாளம் காணப்பட்ட 17 வயது இளைஞனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டில் இருந்த போது இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சிறுமியின் தாயும் வீட்டில் இருந்ததாகவும், தாக்குதல் இடம்பெற்ற போது சந்தேக நபர் வீட்டில் பதுங்கியிருந்து கத்தியால் குத்தியதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் கந்தளாய் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *